
மதுரை: தேர்தலில் திமுகவுக்கும், தவெகவுக்குமே போட்டியென விஜய் அறியாமல் பேசுகிறார் என, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
மகாளய அமாவாசையையொட்டி, மதுரை தெப்பக்குளத்திலுள்ள முத்தீஸ்வரர் கோயிலில் ஏற்பாடு செய்து இருந்த அன்னதான நிகழ்வில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி.உதயகுமார் குடும்பத்தினருடன் பங்கேற்று பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.