
‘வேட்டுவம்’ படத்தின் கதைக்களம் எப்படியிருக்கும் என்று பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, தினேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வேட்டுவம்’. இதன் படப்பிடிப்பு நீண்ட மாதங்களாக நடைபெற்று வருகிறது. மேலும், இப்படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. முதன்முறையாக இப்படம் குறித்து பேட்டியொன்றில் பேசியிருக்கிறார் பா.ரஞ்சித்.