
சென்னை: “அரசியலில் நிரந்தரமாக நண்பர்களும் கிடையாது, பகைவர்களும் கிடையாது. பாஜக நிச்சயமாக எந்த உட்கட்சி பிரச்சினையிலும் தலையிடாது” என தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
சேலத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்தார். பின்னார் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: அரசியலில் நிரந்தரமாக நண்பர்களும் கிடையாது, பகைவர்களும் கிடையாது. அதுமட்டுமில்லாமல் தேர்தலுக்கு இன்னும் ஆறு ஏழு மாதங்கள் உள்ளன. தற்போது திமுக சார்பில் `உங்களுடன் முதல்வர்’ என்ற திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிகாரிகள் தான் வீதி வீதியாக சென்று கொண்டிருக்கிறார்கள்.