
மெட்ரோ ரயில்களில் பயணிகள் தவறவிட்ட பொருட்களை மீட்டு ஒப்படைக்கும் விதமாக, சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இரண்டு வழித் தடங்களில் 54 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் நாள் தோறும் 3 லட்சம் பேர் பயணிக்கின்றனர். பயணிகள் பாதுகாப்பு, வசதிக்காக பல்வேறு நடவடிக்கைகளை மெட்ரோ ரயில் நிறுவனம் எடுக்கிறது. அந்த வகையில், பயணிகள் தவறவிட்ட பொருட்களை ஒப்படைக்க, மீட்டெடுக்கப்பட்ட பொருட்கள் அலுவலகம், சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் திறக்கப்பட்டுள்ளது.