
சென்னை: மாணவர்களிடம் சாதிய உணர்வு , பாலின பாகுபாடு போன்ற பிற்போக்குத்தனங்கள் தலையெடுக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பள்ளிக்கல்வித் துறை சார்பில் முப்பெரும் விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில்புதிதாக தேர்வுசெய்யப்பட்ட 2,715 ஆசிரியர்களுக்கான நுழைவுநிலை பயிற்சியை முதல்வர் தொடங்கிவைத்தார். தொடர்ந்து ரூ.122 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட 76 அரசு பள்ளிக்கட்டிடங்களை திறந்துவைத்த அவர், ரூ.310 கோடியில் 262 அரசு பள்ளிகளுக்கு புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கும், பாரத சாரண-சாரணியர் தலைமை அலுவலக கட்டிடத்துக்கும் அடிக்கல் நாட்டினார்.