
பாவ்நகர்: ‘‘பிற நாடுகளைச் சார்ந்திருப்பதுதான் இந்தியாவின் முக்கிய எதிரி. நாம் சந்திக்கும் நூற்றுக்கணக்கான பிரச்சினைகளுக்கு ஒரே மருந்து தற்சார்பு இந்தியாதான்’’ என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
குஜராத்தின் பாவ்நகரில் ‘சமுத்ர சே சம்ரிதி’ (கடலில் இருந்து வளம்) நிகழ்ச்சியை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். அப்போது ரூ.34,200 கோடி மதிப்பிலான கடல்சார் மற்றும் பிராந்திய வளர்ச்சி திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.