
புதுடெல்லி: டெல்லியில் உள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் மருத்துவ அறிவியல் மையம் மற்றும் டாக்டர் ராம் மனோகர் லோகியா மருத்துவமனையின் 11-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது.
இதில் தேசிய மருத்துவ ஆணைய தலைவர் டாக்டர் அபிஜத் ஷேத் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது: ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவர் என்ற உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைப்படி நாடு முழுவதும் மருத்துவர்களின் எண்ணிக்கையை சீராக உயர்த்த மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ மாணவர்களின் விகிதத்தையும் 1:1 என்பதை அடைவதற்கான முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.