• September 21, 2025
  • NewsEditor
  • 0

மயிலாடுதுறை: ​முஸ்​லிம்​களுக்கு அரசி​யல் பிர​தி​நி​தித்​து​வம் அளிக்கவேண்​டும். வக்பு திருத்​தச் சட்​டத்தை ரத்து செய்ய வேண்​டும் ஆகிய கோரிக்​கைகளை வலி​யுறுத்தி மனிதநேய மக்​கள் கட்சி சார்​பில் மயி​லாடு​துறை​யில் நேற்று பொதுக்​கூட்​டம் நடைபெற்​றது.

இதில் பங்​கேற்ற அக்​கட்​சி​யின் தலை​வர் ஜவாஹிருல்​லா, பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: பதிவு செய்​யப்​பட்ட 400 கட்​சிகளின் பதிவை இந்​திய தேர்​தல் ஆணை​யம் ரத்து செய்​துள்​ளது. மமக 2009 முதல் பதிவு செய்​யப்​பட்​டு, பல்​வேறு தேர்​தல்​களில் சொந்த சின்​னத்​தில் போட்​டி​யிட்டு வெற்றி பெற்​றுள்​ளது. எதிர்க்​கட்சி தலை​வர் ராகுல்​ வாக்​காளர் பட்​டியலில் தேர்​தல் ஆணை​யம் செய்​யும் முறை​கேடு​களை அம்​பலப்​படுத்​துகிறார். அதை திசை திருப்​பவே பதிவு செய்​யப்​பட்ட கட்​சிகளின் அங்​கீ​காரத்தை தேர்​தல் ஆணை​யம் ரத்து செய்​துள்​ளது. இவ்​வாறு அவர் கூறி​னார்​.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *