
வயநாடு: 2024 மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி வாக்குத் திருட்டில் ஈடுபட்டதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். மேலும், இதில் எல்லோருடைய சந்தேகங்களையும் தீர்க்கும் வகையில் விரைவில் ஒரு ஹைட்ரஜன் குண்டை வெளிப்படுத்துவேன் என்று அவர் தெரிவித்தார்.
கேரளாவின் வயநாட்டில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, “2024 மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி வாக்குத் திருட்டில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பாக எல்லோருடைய சந்தேகங்களையும் தீர்க்கும் வகையில் ஒரு ஹைட்ரஜன் குண்டை விரைவில் வெளிப்படுத்துவேன். அந்த ஆதாரம் இப்போதுள்ள நிலைமையின் யதார்த்தத்தை முற்றிலுமாக சிதைக்கும்.