
ராமேசுவரம்: புனித தலமான ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடற்கரை மற்றும் ராமநாத சுவாமி கோயில் அருகே சட்ட விரோதமாக மது விற்பனை நடப்பதால், கோயிலுக்கு வரும் பக்தர்களும், சுற்றுலாப் பயணிகளும் வேதனை அடைந்துள்ளனர்.
நாட்டின் முக்கிய புனிதத் தலங்களில் ராமேசுவரம் முக்கிய இடம் வகிக்கிறது. ஆனால், இங்கு புனிதத்தை கெடுக்கும் வகையில் மதுக்கடைகள் இயங்கி வந்தன. உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, ராமேசுவரம் தீவில் இயங்கிவந்த 11 மதுக்கடைகளில் 9 கடைகள் மூடப்பட்டன.