
பவநகர் (குஜராத்): உலகில் நமக்கு எந்த பெரிய எதிரியும் இல்லை. நமது ஒரே உண்மையான எதிரி, மற்ற நாடுகளைச் சார்ந்திருப்பதுதான் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
குஜராத்தின் பவநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "இந்தியா தற்சார்பு அடைய வேண்டும். அதற்கான தன்னம்பிக்கையை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். உலகில் நமக்கு எந்த பெரிய எதிரியும் இல்லை. நமது ஒரே உண்மையான எதிரி என்பது மற்ற நாடுகளைச் சார்ந்திருப்பதுதான். இதுவே நமது மிகப் பெரிய எதிரி. நாம் ஒன்றாக இந்த எதிரியை தோற்கடிக்க வேண்டும்.