
பெங்களூரு: பெங்களூரு சாலைகளில் ஏற்பட்டுள்ள பள்ளங்கள் குறித்த விமர்சனங்கள் அதிகரித்துள்ள நிலையில், ‘சாலைகளில் உள்ள பள்ளங்களை யாரும் உருவாக்குவதில்லை, இயற்கை காரணங்களாலும், கனமழையாலும் அவை உருவாகின்றன’ என்று கர்நாடக துணை முதல்வரும், பெங்களூரு நகர மேம்பாட்டு அமைச்சருமான டி.கே. சிவகுமார் கூறினார்.
பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய சிவகுமார், “சாலையில் ஏற்பட்ட பள்ளங்கள் தொடர்பான பிரச்சனையைத் தீர்க்க நாங்கள் இங்கே இருக்கிறோம். பாஜக இதில் அரசியல் செய்கிறது; அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். இன்று மாலை, முதல்வர் சித்தராமையாவும் இது குறித்து ஒரு கூட்டத்தை நடத்துகிறார்.