
நாகப்பட்டினம்: நாகையில் இன்று (சனிக்கிழமை) பிரச்சாரம் செய்த தவெக தலைவர் விஜய், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகத்தை கொள்ளையடிக்கும் திமுகவா, இல்லை தமிழக மக்களின் மனங்களில் இருக்கும் நானா? என்று பார்த்துவிடுவோம்.” என்று திமுகவுக்கு சவால்விட்டுப் பேசியுள்ளார் விஜய். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ‘மோடியா; இல்லை இந்த லேடியா?” என்று சவால்விட்ட பாணியில் விஜய் திமுகவுக்கு சவால் விட்டுப் பேசியுள்ளார்.
விஜய் பேச்சின் விவரம் வருமாறு: அண்ணாவுக்கும் பெரியாருக்கும் வணக்கம். நாகூர் ஆண்டவர் அன்புடன், நெல்லுக்கடை மாரியம்மன், வேளாங்கண்ணி ஆசியோடு, கடல்தாய் மடியில் இருக்கும், என் மனதுக்கு நெருக்கமான நாகப்பட்டினம் மண்ணில் இருந்து பேசிக் கொண்டிருக்கிறேன்.