
சென்னை: அரசு பள்ளியில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய நிலையில், மாவட்ட அமைச்சர்கள் குறுநில மன்னர்கள் போல் செயல்படுவதா? என தமிழக பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து பாஜக மாநில தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகனேரி மற்றும் ஆத்தூரில் உள்ள அரசு பள்ளிகளில் தன்னுடைய பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன். அந்த பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பாட்டுப் பாடி வாழ்த்து தெரிவிக்க நிர்ப்பந்தம் செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது.