
ஸ்ரீநகர்: காஷ்மீரின் ஸ்ரீநகரை சேர்ந்தவர் யாசின் மாலிக் (59). கடந்த 1977-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி (ஜேகேஎல்எப்) என்ற தீவிரவாத அமைப்பை அவர் தொடங்கினார். பல்வேறு தீவிரவாத செயல்களில் ஈடுபட்டார்.
கடந்த 1989-ம் ஆண்டு டிசம்பரில் அப்போதைய மத்திய உள்துறை அமைச்சர் முப்தி முகமது சையதுவின் மகள் ரூபியாவை கடத்தினார். கடந்த 1990-ம் ஆண்டு ஸ்ரீநகரில் ஜேகேஎல்எப் நடத்திய தாக்குதலில் 4 விமானப்படை வீரர்கள் உயிரிழந்தனர்.