
சென்னை: சென்னையில் 3 ஆயிரம் சமையல் கலைஞர்கள் பங்கேற்ற, சமையல் போட்டி திருவிழா விமரிசையாக தொடங்கியது. இதை, அமைச்சர் ஆர்.ராஜேந்திரன் தொடங்கி வைத்தார். இந்திய வர்த்தக மேம்பாட்டு அமைப்பு மற்றும் தமிழ்நாடு வர்த்தக மேம்பாட்டு அமைப்பின் சார்பில், ஆஹார் உணவு மற்றும் விருந்தோம்பல் கண்காட்சி சென்னை நந்தம்பாக்கத்தில் நேற்று தொடங்கியது.
இதன் ஒரு பகுதியாக நடைபெற்ற தென்னிந்திய சமையல்கலை வல்லுநர்கள் சங்கத்தின் (சிகா), 7-வது ‘கலினரி ஒலிம்பியாட்’ சமையல் போட்டி திருவிழா மற்றும் கண்காட்சியை தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ஆர்.ராஜேந்திரன் தொடங்கி வைத்தார். 3 நாட்கள் நடைபெறும் போட்டிகளுக்கான கோப்பையை சங்கத்தின் தலைவர் கே.தாமோதரன் வெளியிட்டார்.