
புதுச்சேரி அரசியலில் லாட்டரி அதிபர் மாட்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் ஆளும் கட்சிக்கு எதிராக ஆசிட் கணைகளை வீச ஆரம்பித்திருப்பது என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணிக்குள் பகையை மூட்டிக் கொண்டிருக்கிறது.
கடந்த 2016-ல் புதுச்சேரி மாநிலத்தில் தேர்தலில் போட்டியிடாமலேயே முதல்வரானார் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாராயணசாமி. அப்போது அவருக்காக தனது எம்எல்ஏ பதவியை தியாகம் செய்தவர் இப்போது பாஜக-வில் இருக்கும் அமைச்ச ஜான்குமார். ஆனால் அந்த ஆட்சியின் இறுதியில், மகன் ரிச்சர்டையும் சேர்த்துக்கொண்டு பாஜக-வில் ஐக்கியமானார் ஜான்குமார்.