
“பிரிந்து சென்றவர்களை மீண்டும் அதிமுக-வில் சேர்க்க வேண்டும்” என கெடுவைத்துக் கிளம்பி இருக்கிறார் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன். “அதிமுக-வுக்கு துரோகம் செய்தவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க சாத்தியமே இல்லை” என டெல்லி வரைக்கும் போய் சொல்லிவிட்டு வந்திருக்கிறார் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்.
இப்படி, பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தேர்தலை முன்னிட்டு இன்னும் தெளிவான திசையை நோக்கி திடமாக பயணிக்க முடியாமல் இருக்கும் நிலையில், 2021-ல் தங்களுக்கு கைகொடுத்த பாமக-வுக்குள் தந்தைக்கும் மகனுக்கும் இடையில் நடக்கும் அதிகார யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர இபிஎஸ் மெனக்கிட வேண்டும் என்ற கரிசனக் குரல்கள் பாமக தரப்பிலிருந்து கேட்க ஆரம்பித்திருக்கின்றன.