
திருப்பதி: தன்னை கடித்த பாம்பின் தலையை கடித்த போதை ஆசாமி ஒருவர் தற்போது தீவிர மருத்துவ சிகிச்சையில் உள்ளார். ஆந்திர மாநிலத்தின் திருப்பதி மாவட்டம், தொட்டம்பேடு மண்டலம் சிய்யாவரம் கிராமத்தில் கங்கையம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது.
இதையொட்டி, இதே கிராமத்தை சேர்ந்த வெங்கடேஷ் (48) என்பவர் இரவில் மது அருந்துவிட்டு தள்ளாடியவாறு வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தார். வழியில் ஒரு நாகப்பாம்பு அவரின் காலை கடித்து விட்டது. இதில் ஆத்திரம் அடைந்த வெங்கடேஷ், “என்னையே கடிக்கிறாயா ?” என கேட்டு அந்தப் பாம்பை பிடித்துள்ளார்.