
சென்னை: தமிழகம் முழுவதும் ரூ.105 கோடி மதிப்பில் நடந்துள்ள இன்சூரன்ஸ் மோசடிகள் தொடர்பாக இன்சூரன்ஸ் நிறுவனங்கள் அளித்துள்ள 467 புகார்கள் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்து சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு அனுப்ப போலீஸாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஒரு விபத்துக்கு பல்வேறு நீதிமன்றங்களில் இன்சூரன்ஸ் கோரி வழக்கு தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபட்டது உள்ளிட்ட மோசடிகள் தொடர்பான வழக்கு விசாரணை நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக நடந்தது. அப்போது இன்சூரன்ஸ் நிறுவனம் தரப்பில், “இன்சூரன்ஸ் நிறுவனங்களிடம் ரூ.105 கோடி மோசடி தொடர்பாக அளிக்கப்பட்டுள்ள 467 புகார்கள் மீது இதுவரை போலீஸார் எப்ஐஆர் பதிவு செய்யவில்லை.