
சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி முதுகலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வை 4 வாரங்களில் நடத்த வேண்டுமென தேசிய மருத்துவ ஆணையத்துக்கும், தமிழக அரசுக்கும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக முதுகலை மருத்துவம் படித்துள்ள மருத்துவர்களான நவநீதம், அஜிதா, ப்ரீத்தி உள்ளிட்டோர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருப்பதாவது: நாடு முழுவதும் உள்ள 5 ஆயிரம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி எனப்படும் சிறப்பு முதுகலை மருத்துவ படிப்புகளில் சேர தேர்வு செய்யப்பட்ட பலர் முதுகலைப்படிப்பில் சேரவில்லை.