
புதுடெல்லி: காங்கிரஸ் நடத்தும் போராட்டங்களுக்கு ரூ.100 கொடுத்து பெண்கள் அழைத்து வரப்படுகின்றனர் என்று பாஜக எம்.பி.யும் நடிகையுமான கங்கனா ரனாவத் கூறி வருகிறார். மேலும், டெல்லி விமானநிலையத்தில் பெண் சிஆர்பிஎப் வீராங்கனை ஒருவர் கங்கனாவை அறைந்தார்.
நடிகை கங்கனா ரனாவத் தமிழகத்துக்கு வந்தால், அவர் மீது சுமத்தப்பட்ட அவதூறு வழக்குகளை நினைவு கூர்ந்து அவர் “அறையப்பட வேண்டும்” என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் கே.எஸ். அழகிரி அண்மையில் கூறியிருந்தார். பாஜக எம்.பி.யை அவ்வாறு இவர் விமர்சித்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.