• September 20, 2025
  • NewsEditor
  • 0

விருதுநகர்: கடந்த ஆட்​சி​யில் போக்​கு​வரத்து தொழிலா​ளர்​களுக்கு இழைக்​கப்​பட்ட துரோகம், இந்த ஆட்​சி​யிலும் தொடர்​கிறது. கருணாநி​தி​யின் கொள்​கைகள் காற்​றில் பறக்​க​விடப்​பட்​டுள்ளன என்று சிஐடியு தலை​வர் சவுந்​தர​ராஜன் கூறி​னார். விருதுநகர் அரசுப் போக்​கு​வரத்​துக் கழகத்​தில் பணிபுரிந்த தொழிலா​ளர்​களுக்கு உரிய ஓய்​வூ​தி​யம், வாரிசு வேலை, ஓய்​வூ​தி​யப் பலன்​களை உடனடி​யாக வழங்​குதல் உள்​ளிட்ட கோரிக்​கைகளை வலி​யுறுத்தி ஆக. 19-ம் தேதி முதல் காத்​திருப்பு போராட்​டம் நடை​பெற்று வரு​கிறது.

நேற்று நடை​பெற்ற போராட்​டத்​தில் பங்​கேற்ற சிஐடியு மாநிலத் தலை​வர் சவுந்​தர​ராஜன், பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: தொழிலா​ளர்​களுக்கு கொடுக்​கவேண்​டிய பணத்தை 9 ஆண்​டு​களுக்​குப் பின்​னரும் கொடுக்க மனமில்​லாமல் இருப்​பது நியாயமற்​றது. ஓய்​வு​பெற்ற தொழிலா​ளர்​களுக்கு 9 ஆண்​டு​களாக பஞ்​சப்​படி வழங்​கப்​பட​வில்​லை.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *