
நாகப்பட்டினம் / திருவாரூர்: நாகை, திருவாரூரில் விஜய் இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அப்போது, விஜய் பிரச்சார வாகனத்தை யாரும் பின்தொடர வேண்டாம் என்று தவெக வேண்டுகோள் விடுத்துள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி கடந்த 13-ம் தேதி திருச்சியில் தனது சுற்றுப்பயணத்தை விஜய் தொடங்கினார். தொடர்ந்து, அரியலூரில் பிரச்சாரம் செய்த விஜய், நள்ளிரவு நேரமானதால், பெரம்பலூர் சுற்றுப்பயணத்தை ரத்து செய்தார்.
ஒரே நாளில் 3 மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடியாததால், விஜய் சுற்றுப்பயணத் திட்டம் மாற்றி அமைக்கப்பட்டது. அதன்படி, ஒரு நாளில் 2 மாவட்டங்களில் மட்டும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார்.