• September 20, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ​மாநில அரசே எம்​எல்​ஏக்​கள் தொகுதி மேம்​பாட்டு நிதி​யாக ரூ.3 கோடி வழங்​கும் நிலை​யில், எம்​.பி.க்​கள் தொகுதி மேம்​பாட்டு நிதியை ரூ.10 கோடி​யாக மத்​திய அரசு உயர்த்தி வழங்க வேண்​டும் என்று முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் வலி​யுறுத்​தி​யுள்​ளார். இதற்​காக `திஷா' குழு​வின் ஆய்​வுக் கூட்​டத்​தில் தீர்​மானம் நிறைவேற்ற உள்​ள​தாக​வும் அவர் தெரி​வித்​தார்.

சென்னை தலை​மைச் ​செயல​கத்​தில் முதல்​வர் ஸ்​டா​லின் தலை​மை​யில் மாநில அளவி​லான வளர்ச்​சி, ஒருங்​கிணைப்பு மற்​றும் கண்காணிப்​பு (திஷா) குழுவின் 5-வது ஆய்​வுக்கூட்​டம் நேற்று நடை​பெற்​றது. தலை​மைச் செயலர் நா.​முரு​கானந்​தம் வரவேற்​றார். இக்​கூட்​டத்​தில் முதல்​வர் ஸ்டா​லின் பேசி​ய​தாவது: மத்​திய அரசின் தீன்​த​யாள் அந்​தி​யோதயா யோஜனா – தேசிய ஊரக வாழ்​வா​தார இயக்​கம் திட்​டத்​தின் கீழ் 45,312 சுயஉதவிக் குழுக்​களுக்கு சுழல்​ நி​தி​யாக ரூ.67.97 கோடி, சமு​தாய முதலீட்டு நிதி​யாக 75,127 சுயஉதவிக் குழுக்​களுக்கு ரூ.801.62 கோடி, நலிவு நிலைக்​குறைப்பு நிதி​யாக 13,546 கிராம வறுமை ஒழிப்​புச் சங்​கங்​களுக்கு ரூ.75.73 கோடி வழங்​கப்​பட்​டுள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *