
சென்னை: ‘கர்ப்பிணிகள், மாற்றுத் திறனாளிகள், குழந்தைகள், முதியவர்கள் தனது கூட்டங்களுக்கு வருவதை தவிர்க்க வேண்டுமென மற்றவர்களுக்கு முன்மாதிரியாக விஜய் தெரிவிக்கலாமே?’ என உயர் நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் துணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘தவெக தலைவரான விஜய், செப்.20 முதல் டிச.20 வரைதமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.
தவெக, வின் வளர்ச்சியைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் ஆளுங்கட்சியினரின் அழுத்தம் காரணமாக போலீஸார் பல்வேறு நிபந்தனைகளை விதிக்கின்றனர். பாரபட்சமான மனநிலையில், நாங்கள் அளிக்கும் விண்ணப்பங்களை போலீஸார் உடனுக்குடன் பரிசீலிப்ப தில்லை. எதற்கெடுத்தாலும் கடைசி வரை போராடியே அனுமதி பெற வேண்டியுள்ளது.