• September 19, 2025
  • NewsEditor
  • 0

தேர்தல் ஆணையம் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை தொடங்குவதற்கு முன்னதாகவே வேட்பாளர்களை அறிவித்து பிராச்சாரத்தை தூள் கிளப்புவது நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தனித்துவமான ஸ்டைல். அந்த வகையில், ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) தொகுதியின் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளராக கல்யாணசுந்தரத்தை அண்மையில் அறிவித்தார் சீமான். இதை ஏற்காமல் இருபதுக்கும் மேற்பட்ட நாதக நிர்வாகிகள் சீமானுக்கு குட்பை சொல்லிவிட்டு திமுக-வில் ஐக்கியமாகி இருக்கிறார்கள்.

​நாதக சார்​பில், கள் இறக்க அனு​மதி கோரி தூத்​துக்​குடி மாவட்​டத்​தில் கடந்த ஜூன் மாதம் போராட்​டம் நடத்​திய சீமான், பனை மரத்​தில் ஏறி கள் இறக்​கி​னார். இதற்கு கண்​டனம் தெரி​வித்த புதிய தமி​ழ​கம் கட்சி தலை​வர் டாக்​டர் கிருஷ்ண​சாமி, “சீ​மான் மீது வழக்​குப் பதிவு செய்து நடவடிக்கை எடுப்​பதுடன் நாதக-வை தடை செய்ய வேண்​டும்” என குரல் கொடுத்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *