
புதுடெல்லி: அதானி குழுமம் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாக அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் கடந்த 2023-ம் ஆண்டு குற்றம் சாட்டியது. அந்த நிறுவனத்தின் அறிக்கையை மையமாக வைத்து பல்வேறு ஊடகங்களில் செய்திகள், கட்டுரைகள் வெளியிடப்பட்டன.
இதை எதிர்த்து அதானி எண்டர்பிரைசஸ் சார்பில் டெல்லி வடமேற்கு மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி அனுஜ் குமார் சிங் கடந்த 6-ம் தேதி பிறப்பித்த இடைக்கால உத்தரவில் அதானி குழுமத்துக்கு எதிரான அவதூறு செய்திகளை
வெளியிட தடை விதிக்கப்பட்டது.