
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ஹுரியத் முன்னாள் தலைவர் அப்துல் கனி பட்மறைவை முன்னிட்டு, பிரிவினைவாத ஆதரவு தலைவர்கள் ஒன்று கூடுவதை தடுக்க, முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி, மக்கள் மாநாட்டு கட்சி தலைவர் சாஜத் லோன் உட்பட பலர் நேற்று வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.
ஹுரியத் மாநாட்டு கட்சியின் முன்னாள் தலைவர் அப்துல் கனி பட் உடல்நிலை பாதிப்பு காரணமாக சோப்பூரில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று முன்தினம் இறந்தார். இவரது இறுதிச் சடங்கில் பிரிவினைவாத ஆதரவு தலைவர்கள் ஒன்று கூடுவதை தவிர்க்க காஷ்மீரில் அரசியல் தலைவர்கள் சிலர் நேற்று வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.