
ஹைதராபாத்: அமெரிக்காவில் தெலங்கானாவை சேர்ந்த 30 வயதான மென்பொருள் தொழில்நுட்ப வல்லுநர் போலீஸாரால் கடந்த 3-ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். இந்நிலையில், அவரது உடலை தாயகம் கொண்டு வர வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரின் உதவியை அணுகி உள்ளனர். இதன் மூலம் இந்திய தூதரகத்தின் துணை அவர்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கின்றனர்.
தெலங்கானா மாநிலத்தின் மஹபூப்நகரைச் சேர்ந்தவர் முகமது நிசாமுதீன். அமெரிக்காவின் கலிபோர்னியாவில் அவர் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் அவர் தங்கியிருந்த அறையில் உடன் இருந்தவருடன் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பில் முடிய, அவர் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதை போலீஸார் உறுதி செய்துள்ளனர்.