• September 19, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: ஐக்​கிய அரபு அமீரக (யுஏஇ) தலைநகர் அபு​தாபி​யில் நேற்று இந்​திய, யுஏஇ உயர்​நிலை ஆலோ​சனைக் கூட்​டம் நடை​பெற்​றது. இதில் மத்​திய வர்த்​தக அமைச்​சர் பியூஷ் கோயல் பங்​கேற்​றார். அப்​போது அவர் நிருபர்​களிடம் கூறிய​தாவது: இந்​தி​யா​வும் அமெரிக்கா​வும் மிக நெருங்​கிய நட்பு நாடு​கள். இரு நாடு​கள் இடையி​லான வர்த்தக பேச்​சு​வார்த்தை சரியான திசை​யில் செல்கிறது.

இந்​தி​யா​வின் நம்​பக​மான நட்பு நாடாக அமெரிக்கா விளங்​கு​கிறது. இரு நாடு​களுக்​கும் பலன் அளிக்​கும் வகை​யில் விரை​வில் வர்த்தக ஒப்​பந்​தம் கையெழுத்​தாகும். இவ்​வாறு அமைச்​சர் பியூஷ் கோயல் தெரி​வித்​தார். இந்​தி​யா, அமெரிக்கா இடையே இது​வரை 5 சுற்று பேச்​சு​வார்த்​தைகள் நடை​பெற்று உள்​ளன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *