
பெங்களூரு: கர்நாடக முன்னாள் முதல்வரும் முன்னாள் மத்திய அமைச்சருமான‌ சதானந்த கவுடாவின் வங்கிக் கணக்கை ஆன்லைன் மூலம் ஹேக் செய்து ரூ.3 லட்சம் திருடப்பட்டு உள்ளது. இதுகுறித்து பெங்களூரு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து முன்னாள் முதல்வர் சதானந்த கவுடா பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதன்கிழமை காலையில் எனது செல்போனுக்கு 3 வங்கிகளிடம் இருந்து குறுஞ்செய்தி வந்தது. அதில் ஒவ்வொரு வங்கியில் இருந்தும் தலா ரூ.1 லட்சம் எடுக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டிருந்தது. இதையடுத்து செல்போன் செயலி மூலம் வங்கி கணக்கை ஆராய்ந்தபோது, எனது வங்கி கணக்குகள் மூன்றும் ஹேக் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.