• September 19, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: மக்​கள் நீதி மய்​யம் கட்​சிக்கு பொது​ மக்​களிடம் உள்ள செல்​வாக்​கு, 2026 சட்​டப்​பேரவை தேர்​தலில் எத்​தனை தொகு​தி​களில் போட்​டி​யிடலாம்? என்பன குறித்து கட்சி நிர்​வாகி​களிடம் கமல்​ஹாசன் ஆலோ​சனை நடத்​தி​னார். அடுத்த ஆண்டு நடை​பெறவுள்ள தமிழகம் மற்​றும் புதுச்​சேரி சட்​டப்​பேர​வைத் தேர்​தலுக்​கான பணி​கள் தொடர்​பாக மக்​கள் நீதி மய்​யம் கட்​சி​யின் தலை​வர் கமல்​ ஹாசன், கட்சி நிர்​வாகி​களை செப்​.18 முதல் 21-ம் தேதி வரை மண்டல வாரி​யாகச் சந்​தித்து ஆலோ​சனை நடத்​துகிறார்.

இதற்​காக சென்னை ராஜா அண்​ணா​மலைபுரத்​தில் உள்ள டிஎன் ராஜரத்​தினம் கலை​யரங்​கில் ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது. முதல்​நாள் ஆலோ​சனை கூட்​டம் நேற்று தொடங்​கியது. கமல்​ஹாசன் தலை​மை​யில் நடை​பெற்ற இந்த கூட்​டத்​தில் காலை​யில் சென்னை மண்டல நிர்​வாகி​களும், மாலை​யில் காஞ்​சிபுரம் மண்டல நிர்​வாகி​களும் பங்​கேற்​றனர். அவர்​களு​டன் கட்​சி​யின் பொதுச்​செய​லா​ளர் ஆ.அருணாச்​சலம், துணைத் தலை​வர்​கள் ஏ.ஜி.மவுரி​யா, ஆர்​.தங்​கவேலு உள்​ளிட்ட நிர்​வாகி​களும் பங்கேற்றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *