• September 18, 2025
  • NewsEditor
  • 0

கோவை: மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ‘ககன்யான்’ திட்டத்தின் சோதனை பணிகள் 85 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன (இஸ்ரோ) தலைவர் வி.நாராயணன் கூறினார்.

இது குறித்து கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் இன்று கூறியது: “மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ‘ககன்யான்’ திட்டத்தில் கவனம் செலுத்தி வருகிறோம். இந்த திட்டம் 2018-ல் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த திட்டம். இந்த ஆண்டு ஆளில்லா விண்கலத்தில் ‘வயோமித்ரா’ என்ற இயந்திர மனிதனை அனுப்ப உள்ளோம். டிசம்பர் மாத இறுதியில் இந்நிகழ்வு நடைபெறும். தொடர்ந்து, இரண்டு ஆளில்லா ராக்கெட்களை அனுப்பவும், 2027 மார்ச் மாதம் மனிதர்களை அனுப்பவும் திட்டமிடப்பட்டுள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *