
சென்னை: நேபாள கலவரத்தில் சிக்கிய மக்களை காப்பாற்றிய இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமானுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். நேபாள தலைநகர் காத்மாண்டுவில் சமீபத்தில் இளைஞர்கள் நடத்திய போராட்டம் கலவரமாக மாறியது. பல்வேறு கட்டிடங்கள் தீவைத்து கொளுத்தப்பட்டன.
காத்மாண்டுவில் உள்ள தி ஹயாத் நட்சத்திர விடுதிக்கும் போராட்டக்காரர்கள் தீவைத்து, அங்குள்ள பொருட்களை சூறையாடினர். இதற்கிடையே, நேபாளத்தில் நடைபெறும் தொழிற்சங்க மாநாட்டில் பங்கேற்பதற்காக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும், கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநருமான செந்தில் தொண்டமான் அங்கு தங்கியிருந்த நிலையில், விடுதியில் சிக்கித் தவித்த 5 இந்தியர்களை காப்பாற்றியுள்ளார்.