• September 18, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: நே​பாள கலவரத்​தில் சிக்​கிய மக்​களை காப்​பாற்​றிய இலங்கை தொழிலா​ளர் காங்​கிரஸ் தலை​வர் செந்​தில் தொண்​ட​மானுக்கு அரசி​யல் கட்சி தலை​வர்​கள் பாராட்டு தெரி​வித்​துள்​ளனர். நேபாள தலைநகர் காத்​மாண்​டு​வில் சமீபத்​தில் இளைஞர்​கள் நடத்​திய போராட்​டம் கலவர​மாக மாறியது. பல்​வேறு கட்​டிடங்​கள் தீவைத்து கொளுத்​தப்​பட்​டன.

காத்​மாண்​டு​வில் உள்ள தி ஹயாத் நட்​சத்​திர விடு​திக்​கும் போராட்​டக்​காரர்​கள் தீவைத்​து, அங்​குள்ள பொருட்​களை சூறை​யாடினர். இதற்​கிடையே, நேபாளத்​தில் நடை​பெறும் தொழிற்​சங்க மாநாட்​டில் பங்​கேற்​ப​தற்​காக இலங்கை தொழிலா​ளர் காங்​கிரஸ் தலை​வரும், கிழக்கு மாகாண முன்​னாள் ஆளுநரு​மான செந்​தில் தொண்​ட​மான் அங்கு தங்​கி​யிருந்த நிலை​யில், விடு​தி​யில் சிக்​கித் தவித்த 5 இந்​தி​யர்​களை காப்​பாற்​றி​யுள்​ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *