• September 18, 2025
  • NewsEditor
  • 0

அப்பாவும் பிள்ளையும் ஆளுக்கொரு பக்கமாக ரெண்டுபட்டு நிற்கும் பாமக-வில் அன்புமணி கோஷ்டி ஆளும் கட்சியை அநியாயத்துக்கு போட்டுத் தாக்கி வருகிறது. இதனால், இயல்பாகவே அய்யா கோஷ்டி ஆளும்கட்சியை அனுசரித்து நிற்கிறது. இந்த நிலையில், சேலத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்ட அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இரண்டு கோஷ்டிகளையும் சேர்ந்த பாமக எம்எல்ஏ-க்கள் திமுக ஆட்சிக்கு திடீர் புகழாரம் சூட்டி திகைக்க வைத்தார்கள்.

சேலம் மேற்கு தொகுதி பாமக எம்​எல்​ஏ-​வான அருள் மருத்​து​வர் ராம​தாஸ் அணி​யில் இருக்​கி​றார். இவர் தான் பாமக உட்​கட்சி விவ​காரம் தொடர்​பாக அன்​புமணிக்கு எதி​ரான கருத்​துகளை பதிவு செய்து வரு​கி​றார். அதேசம​யம் மேட்​டூர் தொகுதி பாமக எம்​எல்​ஏ-​வான சதாசிவம், அன்​புமணி விசு​வாசி​யாக தன்னை அடை​யாளம் காட்​டிக் கொண்டு நிற்​கி​றார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *