• September 18, 2025
  • NewsEditor
  • 0

கரூர்: 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றிக் கணக்கை கரூரில் இருந்து தொடங்குவோம் என திமுக முப்பெரும் விழாவில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி எம்எல்ஏ தெரிவித்தார். கரூர் கோடங்கிபட்டியில் திமுக முப்பெரும் விழா நேற்று நடைபெற்றது. விழாவில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி எம்எல்ஏ வரவேற்றுப் பேசியது: 2026 சட்டப்பேரவை தேர்தல் வெற்றிக்கு முதல்வரின் வருகை கட்டியம் கூறும். 2026 தேர்தல் வெற்றிக் கணக்கை கரூரில் இருந்து தொடங்குவோம். வரும் தேர்தலில் நாம் தான் வெற்றிபெறுவோம்.

நாம் மட்டும் தான் வெற்றிபெறுவோம் என்றார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “இந்த முப்பெரும் விழா திமுக வரலாற்றில் இடம்பெறும். தலைவர் முதன் முதலில் போட்டியிட்டு வென்ற தொகுதி அமைந்துள்ள கரூர் மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளையும் வரும் சட்டப்பேரவை தேர்தலில் கைப்பற்றுவோம்” என்றார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *