
புதுடெல்லி: ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கள் தவறானவை, ஆதாரமற்றவை எனத் தெரிவித்துள்ள தேர்தல் ஆணையம், அவர் கூறுவது போல எந்த ஒரு வாக்கையும் ஆன்லைனில் நீக்க முடியாது என கூறியுள்ளது.
ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளுக்கு கடுமையான வார்த்தைகளில் பதில் அளித்துள்ள இந்திய தேர்தல் ஆணையம், “ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கள் தவறானவை, ஆதாரமற்றவை. இந்திய தேர்தல் ஆணையத்தின் உண்மை சரிபார்க்கும் குழு இதனை உறுதிப்படுத்துகிறது. ராகுல் காந்தி கருதுவதைப் போல, எந்த ஒரு வாக்காளரையும் எவர் ஒருவரும் ஆன்லைனில் நீக்க முடியாது.