• September 18, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: நேபாள பிரதமர் சுசீலா கார்கி உடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் பேசினார். அப்போது, நேபாளத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்கான அவரது முயற்சிக்கு இந்தியாவின் உறுதியான ஆதரவை வழங்கும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

நேபாள பிரதமர் சுசீலா கார்கி உடன் நிகழ்த்திய தொலைபேசி உரையாடல் குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், நேபாள இடைக்கால அரசாங்கத்தின் பிரதமர் சுசீலா கார்கி உடன் ஒரு அன்பான உரையாடல் நிகழ்த்தினேன். சமீபத்திய துயரகரமான உயிர் இழப்புகளுக்கு மனமார்ந்த இரங்கலை தெரிவித்தேன். மேலும், நேபாளத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்கான அவரது (பிரதமர் சுசீலா கார்கி) முயற்சிகளுக்கு இந்தியா உறுதியான ஆதரவை வழங்கும் என்பதை தெரிவித்தேன்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *