
சென்னை: புழல் சிறை வளாகத்தில் உள்ள கோழிப் பண்ணையில், கடந்த 4 நாட்களில் சுமார் 2 ஆயிரம் கோழிகள் மர்மமான முறையில் இறந்துள்ளன. அவைகள் பறவை காய்ச்சல் தொற்றால் உயிரிழந்ததா? என மருத்துவ ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
தமிழக சிறைகளில் உள்ள கைதிகளுக்கு வாரத்துக்கு இருமுறை கோழி இறைச்சி உணவாக வழங்கப்படுகிறது. இதற்கு தேவையான கோழிக் கறியை சிறை கைதிகளே உற்பத்தி செய்து கொள்வதற்காக, தமிழகத்தில் உள்ள சிறைகளில் தமிழ்நாடு சிறைத்துறை சார்பில், கைதிகளால் கோழிப்பண்ணை அமைக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது.