
புதுடெல்லி: ‘‘பாகிஸ்தானை நமது வீரர்கள் அடிபணிய வைத்ததை, ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் கமாண்டரே ஒப்புக் கொண்டுள்ளார்’’ என்று இந்திய ராணுவ வீரர்களுக்கு பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார்.
காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலில், பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில், 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். அதற்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் தீவிரவாத முகாம்கள், நூர் கான் விமானம் உட்பட பல கட்டமைப்புகள் நாசமடைந்தன.