• September 18, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: “ஒரு மாதம் சண்டை நிறுத்​தம் செய்​கிறோம். இந்​தக் கால கட்​டத்​தில் அமைதி பேச்​சு​வார்த்தை நடத்தி சுமூக தீர்வு காணலாம்” என்று மத்​திய அரசுக்கு மாவோ​யிஸ்ட்​கள் கடிதம் அனுப்​பிய​தாக தகவல் வெளி​யாகி உள்​ளது. சத்​தீஸ்​கர், ஜார்க்​கண்ட் உள்​ளிட்ட சில மாநிலங்​களில் மாவோ​யிஸ்ட்​கள் தொடர்ந்து வன்​முறை​யில் ஈடு​பட்டு வரு​கின்​றனர்.

இந்​நிலை​யில், வரும் 2026-ம் ஆண்டு மார்ச் மாதத்​துக்​குள் நாட்​டில் இருந்து மாவோ​யிஸ்ட்​கள் முற்​றி​லும் ஒழிக்​கப்​படு​வார்​கள் என்று மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா திட்​ட​வட்​ட​மாக கூறி​யுள்​ளார். அதன்​படி, உள்​ளூர் போலீ​ஸார், கோப்ரா கமாண்​டோக்​கள், சிஆர்​பிஎப் வீரர்​கள் என பெரும் பட்​டாளம், மாவோ​யிஸ்ட் ஒழிப்​புப் பணி​களில் ஈடு​பட்டு வரு​கின்​றன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *