
சென்னை: பெரியாரின் பிறந்த நாள் தமிழக அரசின் சார்பில், சமூக நீதி நாளாக அனுசரிக்கப்பட்டது. அவரது படத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை செலுத்தினர். சமூக அடக்குமுறைகளை எதிர்த்து போராடியவர் என புகழாரம் சூட்டினர்.
பெரியாரின் 147-வது பிறந்த நாள் தமிழகம் முழுவதும் நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தமிழக அரசு பெரியார் பிறந்த தினத்தை சமூக நீதி நாளாக கொண்டாடியது. திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகேயுள்ள பெரியாரின் சிலைக்கு அருகே மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது படத்துக்கு முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, முதல்வர் தலைமையில் அனைவரும் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்றனர்.