
கரூர்: “திராவிடம் என்றால் என்னவென்று தெரியாது என்று கூறிய பழனிசாமி, அதிமுக தலைமை பொறுப்பில் இருப்பது வெட்கக்கேடு. அதிமுக தொடங்கியபோது, தன்னுடைய கொள்கை அண்ணாயிசம் என்றார்கள். அதை பழனிசாமி அடிமையிசம்னு மாற்றி, இப்போது அமித் ஷாவே சரணம் என்று மொத்தமாக சரண்டராகிவிட்டார்” என்று முதல்வர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேலும், “இப்போதும் சிலர் திமுகவுக்கு நாங்கள்தான் மாற்று என்று பேசுகின்றனர். மாற்றம், மாற்றம் என்று சொன்னவர்கள்தான் மாறினார்கள்; மறைந்தும் போனார்கள். ஆனால், திமுக மட்டும் மாறவில்லை. தமிழக மக்கள் மனதில் என்றும் மறையவில்லை” என்று தவெக தலைவர் விஜய்க்கு மறைமுறைமாக எதிர்வினையாற்றினார் முதல்வர் ஸ்டாலின்.