
சென்னை: கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர் சங்கங்கள் கூட்டமைப்பின் மாநில மாநாடு நவம்பரில் நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக மாநில ஒருங்கிணைப்பாளர் மு.வரதராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக சத்துணவு திட்டத்தில் இன்றைக்கு ஏறத்தாழ 85 ஆயிரம் காலிப்பணியிடங்கள் நிரப்படாமல் உள்ளன. அதேபோல் சத்துணவு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.7,850 வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தும் தமிழக அரசு இதுவரை அமல்படுத்த இல்லை.