
மேடவாக்கம் ஏரி முதல் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் வரை, 2,200 மீட்டர் தூரம், ரூ.,57.70 கோடியில் கட்டப்பட்டு வரும் பெரிய பாதாள மூடு கால்வாய் பணி இந்த மாதத்தில் நிறைவடையும் என, நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேடவாக்கம், பள்ளிக்கரணை, சுண்ணாம்பு கொளத்தூர், கோவிலம்பாக்கம் போன்ற பகுதிகள், மழைக்காலங்களில் வெள்ளத்தால் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வந்தது. இந்த பகுதியில் உள்ள ஏரிகளுக்கு மழைநீர் செல்லவும், வெளியேறவும் போதிய வசதி இல்லாமல் இருந்தது.
இதனால் இந்த பகுதியில் வசித்து வரும் மக்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில், நீர்வளத்துறை சார்பில் ரூ.58 கோடி மதிப்பில் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் மழைநீர் செல்ல, மேற்கண்ட பகுதிகளில் உள்ள ஏரிகளை இணைத்து, பாதாள மூடு கால்வாய் அமைக்க முடிவு செய்யப்பட்டு பணிகள் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.