• September 17, 2025
  • NewsEditor
  • 0

அதிமுக-வை ஒருங்கிணைக்க தனக்கு 10 நாள் கெடு வைத்த செங்கோட்டையனின் கட்சிப் பதவிகளை இபிஎஸ் பறித்திருக்கும் நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சரும் அமைப்புச் செயலாளருமான பி.தங்கமணிக்கு எதிராக அதிமுக முன்னாள் எம்எல்ஏ-க்கள் அணி திரட்டி வருவதும் பேசுபொருளாகி இருக்கிறது.

நாமக்​கல் மாவட்​டத்​தில் செப்​டம்​பர் 19, 20, 21 ஆகிய 3 நாட்​கள் எடப்​பாடி பழனி​சாமி பிரச்​சா​ரப் பயணம் மேற்​கொள்ள இருக்​கி​றார். இந்​தப் பயணம் தொடர்​பாக நாமக்​கல் மாவட்ட அதி​முக ஆலோ​சனைக் கூட்​டம் நாமக்​கல்​லில் உள்ள மாவட்ட தலைமை அலு​வல​கத்​தில் கடந்த 2-ம் தேதி நடை​பெற்​றது. முன்​னாள் அமைச்​சரும் மாவட்​டச் செய​லா​ள​ரு​மான பி.தங்​கமணி தலை​மை​யில் நடை​பெற்ற இந்​தக் கூட்​டத்​தில் முன்​னாள் அமைச்​சர் சரோஜா, பரமத்​திவேலூர் எம்​எல்​ஏ-​வான சேகர், முன்​னாள் எம்​எல்​ஏ-க்​கள் சரஸ்​வ​தி, கலா​வதி உள்​ளிட்ட பலரும் கலந்து கொண்ட நிலை​யில், நாமக்​கல் நகரச் செய​லா​ள​ரும், முன்​னாள் எம்​எல்​ஏ-வு​மான கே.பி.பி.​பாஸ்​கரும் அவரது ஆதர​வாளர்​களும் கலந்​து​கொள்​ளாமல் புறக்​கணித்​தனர்.

அண்​மை​யில் அதி​முக-​வில் இணைந்த சேந்​தமங்​கலம் அதி​முக முன்​னாள் எம்​எல்​ஏ-​வான சி.சந்​திரசேகரனும் இந்​தக் கூட்​டத்​தில் கலந்​து​கொள்​ள​வில்​லை. இந்​தக் கூட்​டம் நடப்​பது குறித்து முறை​யாக தகவல் தெரிவிக்​காததே அவர்​கள் கூட்​டத்​தில் கலந்​து​கொள்​ளாததற்​குக் காரணம் என்று சொல்​லப்​படும் நிலை​யில், “ஆனால், அது​மட்​டுமே காரணம் கிடை​யாது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *