
அதிமுக-வை ஒருங்கிணைக்க தனக்கு 10 நாள் கெடு வைத்த செங்கோட்டையனின் கட்சிப் பதவிகளை இபிஎஸ் பறித்திருக்கும் நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சரும் அமைப்புச் செயலாளருமான பி.தங்கமணிக்கு எதிராக அதிமுக முன்னாள் எம்எல்ஏ-க்கள் அணி திரட்டி வருவதும் பேசுபொருளாகி இருக்கிறது.
நாமக்கல் மாவட்டத்தில் செப்டம்பர் 19, 20, 21 ஆகிய 3 நாட்கள் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இந்தப் பயணம் தொடர்பாக நாமக்கல் மாவட்ட அதிமுக ஆலோசனைக் கூட்டம் நாமக்கல்லில் உள்ள மாவட்ட தலைமை அலுவலகத்தில் கடந்த 2-ம் தேதி நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும் மாவட்டச் செயலாளருமான பி.தங்கமணி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சரோஜா, பரமத்திவேலூர் எம்எல்ஏ-வான சேகர், முன்னாள் எம்எல்ஏ-க்கள் சரஸ்வதி, கலாவதி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்ட நிலையில், நாமக்கல் நகரச் செயலாளரும், முன்னாள் எம்எல்ஏ-வுமான கே.பி.பி.பாஸ்கரும் அவரது ஆதரவாளர்களும் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தனர்.
அண்மையில் அதிமுக-வில் இணைந்த சேந்தமங்கலம் அதிமுக முன்னாள் எம்எல்ஏ-வான சி.சந்திரசேகரனும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. இந்தக் கூட்டம் நடப்பது குறித்து முறையாக தகவல் தெரிவிக்காததே அவர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளாததற்குக் காரணம் என்று சொல்லப்படும் நிலையில், “ஆனால், அதுமட்டுமே காரணம் கிடையாது.