
சென்னை: ‘23-ம் புலிக்கேசி’ பட பாணியில் இன்று முதல் எடப்பாடி பழனிசாமியை ‘முகமூடியார்’ பழனிசாமி என்று அழைக்க வேண்டும் என்று இபிஎஸ் – அமித் ஷா சந்திப்பு குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் காட்டமாக விமர்சித்துள்ளார்
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “செப்.15-ம் தேதி அண்ணா பிறந்தநாள் அன்று சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் எப்படி எல்லாம் எடப்பாடி பழனிசாமி வீர வசனம் பேசினார். ‘நான் தன்மானம் மிக்கவன்’, ‘எனக்கு ஆட்சி அதிகாரம் முக்கியம் அல்ல’, என்றெல்லாம் பேசினார். மேலும், பத்திரிகைகளில் அவரது பயணம் தள்ளி வைக்கப்பட்டது தெடர்பாக வெளிவந்த செய்திகளுக்கு கோபித்துக் கொண்டவர், வானிலையை காரணம் காட்டி தள்ளி வைத்ததாக கதை விட்டார்.