
சென்னை: மெட்ராஸ் காகித வர்த்தகர்கள் சங்கத்தின் சார்பில் நடத்தப்படும், இந்திய காகித வர்த்தகர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின், 64-வது ஆண்டு பொதுக்குழு மற்றும் 3 நாள் அகில இந்திய மாநாட்டின் தொடக்க விழா சென்னையில் கடந்த செப்.12-ம் தேதி நடைபெற்றது.
இவ்விழாவில் தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தின் தலைவர் சந்தீப் சக்சேனா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, மாநாட்டை தொடங்கி வைத்து சங்கத்தின் ஆண்டுமலரை வெளியிட்டு பேசியதாவது: இத்துறையை பொறுத்தவரை ஆலைகள், வர்த்தகர்கள் இரண்டும் ஒரு வாகனத்தின் சக்கரங்கள் போல பிரிக்க முடியாது.