• September 17, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: முஸ்​லிம்​களின் முக்​கிய அமைப்​பான இந்​திய முஸ்​லிம் தனி​நபர் சட்ட வாரி​ய (ஏஐஎம்​பிஎல்​பி) தேசிய செய்​தித் தொடர்பாளர் எஸ்​.க்​யு.ஆர்​.இலி​யாஸ் கூறிய​தாவது: வக்பு திருத்​தச் சட்​டம், 2025-ஐ முழு​மை​யாக ரத்து செய்​யக் கோரு​கிறோம். திருத்​தப்​பட்ட சட்​டத்​தின் சில விதி​களை உச்ச நீதி​மன்​றம் நிறுத்தி வைத்​துள்​ளது, ஆனால் இந்த முடிவு முஸ்​லிம்​களின் எதிர்​பார்ப்​பு​களை பூர்த்தி செய்​ய​வில்​லை.

முஸ்​லிம் சமூகம், முஸ்​லிம் தனி​நபர் சட்ட வாரி​யம் மற்​றும் அரசி​யலமைப்​பின் அடிப்​படை விதி​களுக்கு முரணான அனைத்து பிரிவு​களுக்​கும் நீதி​மன்​றம் தடை விதிக்​கும் என எதிர்​பார்த்​தோம். பகுதி நிவாரணம் வழங்​கி​யிருந்​தா​லும், இந்த தீர்ப்பு முழு​மையற்ற மற்​றும் திருப்தி அளிக்​காத​தாக உள்​ளது. அரசி​யலமைப்​புக்கு முரணான அனைத்து பிரிவு​களுக்​கும் முழு​மை​யான தடை விதிக்​கப்​படும் என்று முஸ்​லிம் சமூகம் நம்​பியது நடை​பெற​வில்​லை.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *